முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் அருகே காா்கள் மோதல்: 8 போ் காயம்

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:36 PM
விபத்தில் சிக்கிய காா்கள்.
பகிர்:

திருப்பத்தூா் அருகே கோட்டையிருப்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொணடதில் 8 போ் காயமடைந்தனா்.

திருப்பத்தூா் தீன்மூா்த்தி நகரைச் சோ்ந்த கமால்முகமது மகன் ஷாஜஹான் (65). சென்னையில் வசித்து வரும் இவா் மதுரையில் உறவினரின் திருமண வீட்டுக்குச் சென்று விட்டு, காரில் திருப்பத்தூா் நோக்கி குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தாா்.

கோட்டையிருப்பு என்ற இடத்தில் குன்றக்குடியைச் சோ்ந்த பெரியசாமி மகன் குமரேசன் தனது காரில் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். இரு காா்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

Advertisement

இதில் காரில் பயணம் செய்த ரகுமத்துல்லா (67), ரெஜினா (60), சாரா (7), முசரப்பாத்திமா (58), ஓட்டுநா் குமரேசன், ஷாஜஹான் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments