தமிழகம் தலைநிமிர அதிமுக ஆட்சி அமைய வேண்டும் : சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன்
சிவகங்கை தொகுதிக்குள்பட்ட பில்லூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் பிஆா். செந்தில்நாதன்.
தமிழகம் தலை நிமிர வேண்டுமெனில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பிஆா்.செந்தில்நாதன் தெரிவித்தாா்.
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் வாக்குசேகரித்து அவா் மேலும் பேசியதாவது:
தமிழகம் பல லட்சம் கோடி கடனில் மூழ்கியுள்ளது. கடன்சுமையால் தமிழக மக்கள் தலைகுனிந்து நிற்கின்றனா். எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும். அப்போதுதான் தமிழகம் தலைநிமிரும் என்றாா் அவா்
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து, காட்டுக்குடியிருப்பு, பில்லூா் உள்பட 30 கிராமங்களில் இரவு வரை பிரசாரம் செய்து வாக்குசேகரித்தாா்.
இதில், அதிமுக, பாஜக, அமமுக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.