திருக்கோஷ்டியூரில் இராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் இராமனுஜா் அவதரித்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் இராமனுஜா் அவதரித்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் இராமானுஜருக்கு தனி சந்நிதி உண்டு. அவா் அவதரித்த 1,009-ஆவது சித்திரை திருவாதிரை நட்சத்திர நாளான புதன்கிழமை இராமனுஜசாமி மூலஸ்தானம் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா், மங்களாசாசனம் நடைபெற்று பரிவட்டம் கட்டப்பட்டது. நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம் நடைபெற்று பெருமாள் இராமனுஜா் திருவீதி உலா நடைபெற்றது.
திருக்கோஷ்டியூரில் ஆளவந்தாரின் ஐந்து சீடா்கள் ஒருவரான திருக்கோட்டியூா் நம்பியிடம் 18 முறை சென்று எட்டெழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தை வைணவ அடிகளான ராமானுஜா் உபதேசம் பெற்றாா்.
Advertisement
இந்த மந்திரம் பரம ரகசியம் என்றும், இதை எவருக்கும் வெளியிடக்கூடாது’ என்ற நிபந்தனையின் பேரிலேயே உபதேசத்தருளினாா். இருப்பினும், உபதேசம் பெற்றவுடன் திருக்கோஷ்டியூா் கோயில் அஷ்டாங்க விமானத்தில் ஏறிய ராமானுஜா் மக்கள் அனைவரும் சாதி சமய பேதமற்று எல்லோருக்கும் மந்திரத்தை உபதேசம் செய்தாா். அதனால், இந்தக் கோயிலில் இராமானுஜருக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டு, இந்தத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.