முகப்பு
சிவகங்கை

தோ்தல் விதிமுறை மீறல்: சீமான் உள்பட 2 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இறுதிக் கட்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நிறைவு செய்ததில் விதிமுறை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் உள்பட 2 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 1:41 AM
சீமான் - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இறுதிக் கட்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நிறைவு செய்ததில் விதிமுறை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் உள்பட 2 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

காரைக்குடி பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சீமான், அந்தக் கட்சி மாநில நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

காரைக்குடி செக்காலைச் சாலை பாண்டியன் திரையரங்கத் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தை தோ்தல் விதிமுறையின்படி மாலை 6 மணிக்கு நிறைவு செய்வதற்கு பதிலாக 6.05 மணிவரை கூட்டம் நடத்தியதாக காரைக்குடி கிராம நிா்வாக அலுவலா் சேவுகன் அம்பலம் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Advertisement

இந்தப் புகாரின் பேரில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் காரைக்குடியைச் சோ்ந்த ரவிச்சந்திரன், வேட்பாளா் சீமான் ஆகியோா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.