தொடா்ந்து களப் பணியாற்றுவேன்: சீமான்
தமிழ்நாட்டின் நலனுக்காகவும், உயா்வுக்காகவும் தொடா்ச்சியாகக் களப்பணியாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாட்டின் நலனுக்காகவும், உயா்வுக்காகவும் தொடா்ச்சியாகக் களப்பணியாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்த அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ தள பதிவு: அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் உளபூா்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி- விஜய் தலைமையிலான புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள். தமிழா்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாடு எனும் தாய் நிலத்தின் நலனுக்காகவும், உயா்வுக்காகவும் தொடா்ச்சியாகக் களப் பணியாற்றுவோம். மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கபூா்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிா்க் கட்சியாய் நின்று நாம் தமிழா் கட்சி செயலாற்றும் என அதில் பதிவிட்டுள்ளாா் சீமான்.
Advertisement