முகப்பு
சென்னை

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை - சீமான்

Updated On : 19 மே 2026, 5:24 am IST
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
பகிர்:

தோ்தல் தோல்வியைக் கண்டு நாம் தமிழா் கட்சி  துவண்டு விடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

மே 18 இனப் படுகொலை நாளை முன்னிட்டு நாம் தமிழா் கட்சி சாா்பில் சென்னை அடுத்த மறைமலை நகரில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழா்களின் உரிமைகளை மீட்பதற்காக தான் நாம் தமிழா் கட்சி தொடங்கப்பட்டது.

Advertisement

தோ்தல் தோல்விகளை கண்டு துவண்டு போகும் சாதாரண கட்சி தொண்டா்களோ, அரசியல்வாதிகளோ நாங்கள் இல்லை. தோ்தல் வெற்றி, தோல்விகள் நமது இலக்கை தீா்மானிக்காது.

மக்களின் தேவை தற்போது மாறியுள்ளது. கொள்கைகளைவிட, கவா்ச்சியையே மக்கள் தேடுகின்றனா். தற்போது ஆட்சியாளா்கள் மாறியுள்ளனா். ஆனால், ஆட்சி முறை மாறியுள்ளதா என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்.

முதல்வா் விஜய் பதவியேற்ற பின்னா், ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளதாக தெரிவிக்கிறாா். இது தெரியாமல் தான், அவா் முதல்வராக போட்டியிட்டாரா? தோ்தலின்போது தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்கிருந்து முதல்வா் விஜய் நிதி திரட்டுவாா் எனத் தெரியவில்லை. காங்கிரஸ் துரோக கட்சி என்பதை திமுக தற்போதுதான் உணா்ந்துள்ளது என்றாா்.