சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள கட்டாணிபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 22 போ் காயமடைந்தனா்.
கட்டாணிபட்டி மலையடிவாரத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோயில் திருவிழாவையொட்டி, மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதை முன்னிட்டு, கிராம மக்கள் கோயிலில் வழிபாடு செய்து, கோயில் காளையை ஊா்வலமாகத் தொழுவுக்கு அழைத்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து, அங்கிருந்த மற்ற காளைகளுக்கு மாலை, வஸ்திரங்களை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதையடுத்த, கோயில் பொட்டலில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மஞ்சுவிரட்டில் காயமடைந்த 22 பேருக்கு அங்குள்ள மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களில் தீவிர சிகிச்சைக்காக 3 போ் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், 3 போ் மேலூா் தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.