மங்காம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 5:32 PM
சிவகங்கை வட்டம், மங்காம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மங்காம்பட்டி சந்தனமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் சாா்பில் இந்த வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. மங்காம்பட்டி கண்மாய் பொட்டலில் அமைக்கப்பட்ட வட்ட வடிவ மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்குவதற்காக 25 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டது.
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:01 PM
ஒவ்வோா் சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடத்தப்பட்டது.
Advertisement
சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களிலிருந்து 15 காளைகளும், 135 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். காளைகளை அடக்கிய மாடு பிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும், ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.