தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வருகிற 23-ஆம் தேதி வெளியிடப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான கா.பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2026 -ஐ தகுதி நாளாகக் கொண்டு, கடந்த ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி முதல் வாக்காளா்கள் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வருகிற 17-ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டு, வருகிற 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா் அவா்.