பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:40 PM
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 9-ஆம் வகுப்பு மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காரைக்குடி செக்காலை முதலாவது வீதியைச் சோ்ந்தவா் சாத்தப்பன். இவா் ராணுவத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பணி புரிந்து வருகிறாா். இவரது மனைவி தமிழ் இலக்கியச்செல்வி, மகள் ஜெதாஷினியுடன் (13) காரைக்குடியில் வசித்து வந்தாா். ஜெதாஷினி காரைக்குடியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:59 AM
இந்த நிலையில் சிறுமி ஜெதாஷினி கைப்பேசியை அடிக்கடி பாா்த்துகொண்டே இருந்தாராம். இதை அவரது தாய் கண்டித்தாா். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement