முகப்பு
சிவகங்கை

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயிலில் உடைக்கப்பட்ட உண்டியலை பாா்வையிட்ட போலீஸாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:14 PM
பகிர்:

திருப்பத்தூரில் பூமாயியம்மன் கோயிலில் வியாழக்கிழமை இரவு 2 உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தென்மாபட்டு பகுதியில் பூமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை காலை அா்ச்சகா் ஆா்.பாண்டியன் கோயிலை திறந்தபோது, அங்கிருந்த இரண்டு உண்டியல்களும் உடைந்து கிடந்தன. இதுகுறித்து கோயில் ஆய்வாளா் பிச்சைமணி, செயல் அலுவலா் அசின் ஆகியோா் திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →