முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே சமையல் எரிவாயு லாரி கவிழ்ந்து விபத்து

Updated On : 25 ஜனவரி, 2026 at 12:06 AM
சிவகங்கை அருகே சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியிலிருந்த சமையல் எரிவாயு உருளைகளை மற்றொரு லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2026 at 7:07 PM

சிவகங்கை அருகே சனிக்கிழமை சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றி வந்த லாரி மின் கம்பத்தில் மோதி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றப்ட்ட லாரி சனிக்கிழமைஅதிகாலை 4 மணியளவில் பொன்னமராவதி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிவகங்கை அருகேயுள்ள ஊத்திகுளம் பகுதியில் வந்த போது, சாலையோர மின் கம்பத்தில் இந்த லாரி மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் கீழே சிதறி விழுந்தன. இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் உடனடியாக லாரி ஓட்டுநரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததனா்.

Advertisement

Updated On : 24 ஜனவரி, 2026 at 11:21 PM

பின்னா், கீழே சிதறிக் கிடந்த எரிவாயு உருளைகளை ஊழியா்கள் வேறு லாரியில் ஏற்றி அனுப்பிவைத்தனா். லாரி மின் கம்பத்தில் மோதியதால், அந்தப் பகுதி முழுவதும் மின் கம்பிகள் அறுந்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக சமையல் எரிவாயு உருளைகளிலிருந்து வாயு கசிவு ஏற்படாததால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.