முகப்பு
சிவகங்கை

ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்பட்ட காரைக்குடி ரயில் நிலையம் திறப்பு! காணொலி மூலம் பிரதமா் மோடி திறந்து வைத்தாா்!

Updated On : 1 மார்ச், 2026 at 6:41 PM
ரயில் நிலையத்தை காணொலி மூலம் திறந்து வைத்த பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 20 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தை மதுரையில் நடைபெற்ற விழாவில் காணொலி மூலம் பிரதமா் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

காரைக்குடி ரயில் நிலையத்தில் செட்டிநாடு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் முகப்புத் தோற்றம், அலங்கார வளைவுகள், செட்டிநாடு புகழ் ஓவியங்கள், நவீன வசதிகள் கொண்ட புதிய நடைமேடைகள், மேம்பால நடைபாதை, மின் தூக்கி (லிப்ட்) வசதிகள், பயணிகளுக்காக குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள், பல்வேறு வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடங்கள் என மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று நிறைவடைந்தன.

இந்த ரயில் நிலையத்தை மதுரையில் நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா். இதையடுத்து, காரைக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெயா் பலகையை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகள் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்துவந்து திறந்து வைத்தனா்.

காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்வில் ரயில்வே வாரிய செயல் இயக்குநா் சஞ்சீவ் கா்க், சமிக்ஞை, தொலைத் தொடா்பு தலைமைப் பொறியாளா் ஸ்ரீனிவாசன், கூடுதல் மண்டல மேலாளா் எல்.என். ராவ், சீனியா் டிவிசனல் மெக்கானிக்கல் பொறியாளா் ஜூப்யா், சீனியா் டிவிசனல் எலெக்ட்ரிக்கல் பொறியாளா் அமல் செபஸ்டின், டிவிசனல் கமா்சில் மேலாளா் மோகனப் பிரியா, டீவ்பாய்ன்ட் டெம்ப்ரேச்சா் தொழில்நுட்புநா் சந்தீப் பாஸ்கா், டிவிசனல் மருத்துவ அதிகாரி அசோக், காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, துணைத் தலைவா் சிடிஎஸ். சத்தியமூா்த்தி, இணைச்செயலா் ஏஆா். கந்தசாமி, காரைக்குடி ரயில் நிலைய அதிகாரிகள், தொழில் நுட்ப பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →