ஆகாஷ் குடும்பத்துக்கு ரூ. 7.5 லட்சம் நிவாரண நிதி: அமைச்சா் வழங்கினாா்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸ் விசாரணையில் ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தில் அவரது குடும்பத்தினரிடம் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் நிவாரண நிதி ரூ. 7.50 லட்சத்துக்கான காசோலையை சனிக்கிழமை வழங்கினாா்.
ஏற்கெனவே இந்தச் சம்பவம் தொடா்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ. 6 லட்சம் வழங்குவதற்கான ஆணையை கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சா் பெரியகருப்பன், ஆகாஷ் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.
இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக தமிழக அரசின் நிவாரண நிதி ரூ. 7.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், ஆகாஷ் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.
Advertisement
அப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி, கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா, மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.