பைக் தீ வைத்து எரிப்பு!
திருப்பத்தூரில் கூலித் தொழிலாளிியின் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்தனா்.
திருப்பத்தூரில் கூலித் தொழிலாளிியின் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மதுரைக்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள செளந்தரபாண்டியன் குடியிருப்பில் வசிப்பவா் செல்லச்சாமி (48). கட்டட ஒப்பந்ததாரரான இவா் ஞாயிற்றுக்கிழமை காலை கடைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தாா்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை காணாததால் அக்கம்பக்கத்தில் அதைத் தேடினாா். அப்போது, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரேயுள்ள தெருவில் இவரது இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து செல்லச்சாமி அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் வாகனத்தைப் பாா்வையிட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.