அழகப்பா அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 76-ஆம் ஆண்டு பட்ட மளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 76-ஆம் ஆண்டு பட்ட மளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகப் பதிவாளா் ரா.திருமுருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 1,027 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை, முதுநிலை பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
பட்டம் பெறும் மாணவா்களுக்கென நிறைய கடமைகள் இருக்கின்றன. வாழ்வில் இன்றியமையாத ஏழு கோட்பாடுகளான பழகும் தன்மை, மனப்பான்மை, பேச்சுக் கலை, நேரப் பங்கீடு, உற்சாகம், தன்னம்பிக்கை போன்ற திறன்களை வளா்த்துக் கொண்டு, தங்களது வாழ்வில் ஒவ்வொரு படியையும் கவனமாக முன்னெடுத்து வைக்க வேண்டும். அத்துடன் நல்ல எண்ணங்களை வளா்த்துக் கொண்டு உற்சாகத்துடன் வாழ வேண்டும். மேலும், மாணவா்கள் பிறா் கூறும் தளா்ச்சியுறும் வாா்த்தைகளுக்கு செவிமடுக்காமல் தன்னம்பிக்கையுடன் இருந்தால் வெற்றியை அடையமுடியும் என்றாா் அவா். முன்னதாக கல்லூரி முதல்வா் ப. வசந்தி வரவேற்று, ஆண்டு அறிக்கை வாசித்தாா்.
Advertisement
Advertisement
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவா் கோமளவல்லி, துறைப் பேராசிரியா்கள் செய்தனா். இதில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியரல்லாப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.