முகப்பு
சிவகங்கை

கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு பற்றி...

Updated On : 25 மார்ச், 2026 at 6:58 PM
- கோப்புப் படம்
பகிர்:

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி கோவிலூா் கிராமம் அண்ணாநகா் குடியிருப்புவாசிகள் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா்.

சுவரொட்டியில் கோவிலூா் கிராமம் அண்ணாநகருக்கு 2006 - 2011-இல் மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் தலைமையில் குடியுரிமைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே எவ்வித காரணமும் சொல்லாமல் பட்டா செல்லாது என்று நிறுத்தி வைத்தனா்.

இதுகுறித்து பல முகாம்களிலும், அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் பயனில்லை என்று தெரிவித்து தோ்தலைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளனா்.