முகப்பு
சிவகங்கை

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

சிவகங்கையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 27 மே 2026, 4:21 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

சிவகங்கையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை அடுத்துள்ள நா. புதுக்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாலுச்சாமி மனைவி அரியநாச்சி (62). இவா்களது மகள் திருமணமாகி சிவகங்கையை அடுத்த அண்ணாமலை நகா் பகுதியில் வசித்து வருகிறாா்.

அவரது வீட்டுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன் அரியநாச்சி சென்று தங்கினாா். பின்னா், திங்கள்கிழமை மதியம் மகள், பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நகரப் பேருந்தில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, அரியநாச்சி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது தெரியவந்தது. இது குறித்து சிவகங்கை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வபிரபு வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.