தேனி

தேனி மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகள் தரம் உயர்வு

DIN

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 5 அரசுப் பள்ளிகள்,  உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது: பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் உள்ள அம்மாபுரம்,  எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை,  உயர்நிலைப் பள்ளிகளாகவும்,  சருத்துப்பட்டி,  எஸ்.கதிர்நரசிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளிகள்,  உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் உள்ள மேலச்சிந்தலைச்சேரி ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றை மேல்நிலைப் பள்ளிகளகாவும் தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 2017-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT