தேனி

இருசக்கர வாகனங்கள் மோதல்: விவசாயி சாவு

DIN

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் தர்மர் (38). இவர் தனது மனைவி பாண்டியம்மாள் (30) மற்றும் 2 குழந்தைகளுடன் திங்கள்கிழமை காலை ஆண்டிபட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த  ஆண்டிப்பட்டியை சேர்ந்த திவ்யபாரதி என்பவர் வாகனத்தின் மீது தர்மர் வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தர்மர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார். மேலும் பலத்த காயமடைந்த பாண்டியம்மாள் மற்றும் அவரது மகள் புவனேஸ்வரி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மற்றொரு மகள், திவ்ய பாரதி லேசான காயமடைந்தனர்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீஸார் திவ்யபாரதி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT