தேனி

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு 

DIN

போடி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தாத்தப்பசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் செல்வராஜ் (23). கூலி வேலை செய்து வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டில் இருந்தபோது மின்சார பொத்தானை அழுத்தியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக செல்வராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT