போடியில் அக்.10 இல் மின்தடை
போடியில் புதன்கிழமை (அக்.10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போடியில் புதன்கிழமை (அக்.10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போடி துணை மின் நிலையத்தில் அக்.10-ம் தேதி மாதாந்திர பாராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை போடி, போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.