முகப்பு
தேனி

போடி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

போடி அருகே பால் விலையை உயர்த்த வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On : 13 பிப்ரவரி 2019, 8:17 am IST
பகிர்:

போடி அருகே பால் விலையை உயர்த்த வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் அரசு பொது நூலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் பசுமாடுகளுடன் பங்கேற்றனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். இதில், பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், மாட்டுத் தீவனங்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.