தேனி

விவசாயி தூக்கிட்டு தற்கொலை

DIN


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள நாகையகோட்டை அன்னசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (37). இவர், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஜவ்வாதுப்பட்டியில் வேலுச்சாமி என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, அன்னசமுத்திரம் காளியம்மன் கோயில் நிர்வாக குழுவினரிடம் ரூ. 50 ஆயிரம் ஏலம் மூலம் கடன் பெற்றாராம். இந்நிலையில், அப்பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் பாலசுப்பிரமணி மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இதனால், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாலசுப்பிரமணி மனைவி ஏரசிக்கம்மாள் (30) அளித்த புகாரின்பேரில் இடையகோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT