வருசநாடு அருகே மக்கள் தொடர்பு முகாம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஊராட்சிக்குள்பட்ட முருக்கோடை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஊராட்சிக்குள்பட்ட முருக்கோடை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார். முகாமில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் 35 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, ரூ. 3 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் 31 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, தோட்டக்கலைதுறை மற்றும் வேளாண்மைதுறை சார்பில சார்பில் ரூ. 43 ஆயிரம் மதிப்பில் 5 பேருக்கு மருந்து தெளிக்கும் கருவி, மரக்கன்று உள்ளிட்டவை மற்றும் 8 பேருக்கு குடும்ப அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான உறுப்பினர் அட்டைகளை ஆட்சியர் வழங்கினார். முருக்கோடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் பயன்பெறும் வகையில் புதிய செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கவும், முருக்கோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடை பயிற்சி பாதை அமைக்கவும், வருசநாடு முதல் வாலிப்பாறை வரை புதிய தார்ச்சாலை அமைக்கவும் கிராம மக்கள் சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த முகாமை தொடர்ந்து முருக்கோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை ஆட்சியர் வழங்கினார். ஆட்சியருடன் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.