தேனி

வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி

DIN

போடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
போடி முந்தல் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பாண்டி மகன் கார்த்திக் (25). இவர், போடியில் உள்ள தனியார் மாங்காய் கிட்டங்கியில் வேலை செய்து வந்தார். வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனே, அவரை போடி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார். 
இது குறித்து போடி குரங்கணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT