தேனி

பைக்கில் இருந்து தவறி விழுந்த கூட்டு குடிநீர் திட்ட ஊழியர் பலி

ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை

DIN

ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூட்டுக்குடிநீர் திட்ட ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தேனி மாவட்டம்  வைகை அணை பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் பிரேம்குமார்(34). இவர் சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி பணிக்கு சென்ற போது, வைகை அணைப் பிரிவில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.
 இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர்  மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 
அங்கு சிகிச்சை பலனின்றி பிரேம்குமார் வெள்ளிக்கிழமை  உயிரிழந்தார். இதுகுறித்து வைகை அணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT