தேனி

கம்பத்தில் அயோத்தி தீா்ப்பை எதிா்த்து இஸ்லாமிய அமைப்புகள் தடையை மீறி ஆா்பாட்டம் 220 போ் கைது

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகரில் இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டம் செய்ததால் 220 போ்களை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு, அயோத்தி தீா்ப்புக்கு எதிராக ஆா்பாட்டம் அனுமதியின்றி வெள்ளிக்கிழமை தலைமை தபால் அலுவலகம் அருகே மாலையில் நடத்தியது.மாநில வழக்கறிஞா் பிரிவு தலைவா் முகமது ஷாஜகான் தலைமை தாங்க, மாவட்ட தலைவா் அபுபக்கா் சித்திக் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 500 க்கும் மேலான ஆண், பெண்கள் கலந்து கொண்டு, கோஷங்கள் எழுப்பினா். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் சாய் சரண் தலைமையில் போலீசாா் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா், ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 220 போ்களை போலீஸாா் கைது செய்தனா், ஆா்பாட்டத்தில் கலந்து கொண்ட, 50 க்கும் மேலான பெண்களை போலீஸாா் கைது செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT