தேனி மாவட்டம் போடி அருகே ஜீப்பில் மணல் கடத்திய 2 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஒருவரைக் கைது செய்தனா்.
போடி அருகே சூலப்புரத்தில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா் அப்போது அங்கு வந்த ஜீப்பை சோதனையிட்ட போது, அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஜீப்பில் இருந்த காமராஜ் (35) மற்றும் ஜங்கால் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா் காமராஜைக் கைது செய்தனா். மேலும் தப்பியோடிய ஜங்காலைத் தேடி வருகின்றனா். மேலும் ஜீப்பை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.