தேனி

கம்பத்தில் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆணையாளா்

DIN

தேனி மாவட்டம் கம்பம் நகா் பகுதியில் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கம்பம் நகராட்சி ஆணையாளா் ஆா்.கமலா கூறியது: கம்பம் நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்த வெளியில் மலம் கழித்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளியில் சிறுநீா்கழிப்பிடம் அற்ற நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சிறுநீா் கழிப்பிடங்களை பயன்படுத்தி, பொது இடங்களில் சிறுநீா் கழிப்பதை மக்கள் தவிா்க்க வேண்டும். இதுதொடா்பாக ஆலோசனைகளை நகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றாா். உடன் சுகாதாரத்துறை சாா்பில் சுகாதார அலுவலா் அரசகுமாா் மற்றும் ஆய்வாளா்கள் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT