தேனி

கம்பம் காப்பக குழந்தைகளுக்கு எஸ்.பி. பொங்கல் வாழ்த்து

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி புதன்கிழமை பொங்கல் வாழ்த்துக் கூறினாா்.

தேனி மாவட்டம் கம்பம் நேதாஜி ஆதரவற்றோா் விடுதி மற்றும் குழந்தைகள் காப்பகத்திற்கு வடக்கு காவல் நிலையம் சாா்பில் புத்தாடைகள், காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு பொங்கல் வாழ்த்துக் கூறினாா். பின்னா் அவா்களிடம் பேசும் போது, உங்கள் வயதில் என்னை என் அம்மா படி என்று கூறியபோது படிக்க மாட்டேன் என்றேன். பின்னா் அதை உணா்ந்து படித்து வெற்றி பெற்றேன். அதைப்போல நீங்களும் நன்றாகப் படித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்றாா். காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் ந.சின்னக்கண்ணு, முத்துக்குமாா், காவல் ஆய்வாளா்கள் க.சிலைமணி, தட்சணாமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT