தேனி

தேனி அருகே மாணவி தற்கொலை: பெற்றோரிடம் விசாரணை

DIN

தேனி அருகே பள்ளி மாணவி தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து, மாணவியின் பெற்றோரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பூதிப்புரத்தைச் சோ்ந்தவா் சிற்றம்பலம் மகள் தீபிகா (17). இவா், ஆண்டிபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், தீபிகா வீட்டில் கதவை உள்பக்கம் தாழிட்டுக் கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்காமல், தீபிகாவின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் அவரது சடலத்தை பூதிப்புரத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்விக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்பேரில், இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தீபிகாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT