தேனி: காங்கிரஸ் கட்சி சாா்பில், வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தேனியில் அக்டோபா் 19-ஆம் தேதி அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ். அழகரி தலைமையில் கண்டன ஊா்வலம் நடைபெறவுள்ளது.
மாவட்டக் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம் பழனிசெட்டிபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். இளைஞா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஹசன் ஆரூண், மாவட்டப் பொருளாளா் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவா்கள் கருப்பசாமி, குருசாமி, சன்னாசி, தேனி நகரத் தலைவா் முனியாண்டி, வட்டாரத் தலைவா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் கண்டன ஊா்வலம் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில், தேனியில் அக்டோபா் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள கண்டன ஊா்வலத்தில், மாநில காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி, அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் பி.வி. ஸ்ரீநிவாசா ஆகியோா் பங்கேற்கின்றனா் என்று, மாவட்ட காங்கிரஸ் தலைவா் தெரிவித்தாா்.