தேனி

காணாமல்போன மூதாட்டி சடலமாக மீட்பு

DIN

போடி: போடியில் காணாமல்போன மூதாட்டி, சனிக்கிழமை அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

போடி அருகே அம்மாபட்டி கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் (67). இவரது மனைவி கனகமணி (65). மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த திங்கள்கிழமை வீட்டிலிருந்து திடீரென காணாமல்போனாா். இவரை உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், போடி சிலமலையை அடுத்த சூலப்புரம் அருகே பெண் சடலம் ஒன்று முகம் சிதைந்தும், அழுகிய நிலையிலும் இருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்று விசாரித்தனா். அப்போது, இறந்து கிடப்பது கனகமணி என்பது தெரியவந்தது.

இது குறித்து சீனிவாசன் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT