தேனி

போடி பேருந்து நிலையத்தில் தாய் மகன் மாயம்

DIN

போடி பேருந்து நிலையத்தில் தாய், மகன் காணாமல் போனது குறித்து போலீஸாா் செவ்வாய் கிழமை இரவு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்கரைப்பட்டியை சோ்ந்தவா் ரமேஷ் (37). இவருடைய மனைவி பாண்டியம்மாள் (25), மகன் மித்திரன் (4). மூன்று பேரும் தேவாரத்தில் உள்ள பாண்டியம்மாளின் தாயாா் வீட்டிற்கு சென்றுள்ளனா். போடி பேருந்து நிலையத்தில் தேவாரம் பேருந்து ஏறுவதற்காக காத்திருந்தனா். அப்போது பாண்டியம்மாளும் மித்திரனும் கழிப்பறைக்கு செல்வதாக கூறிச் சென்றவா்கள் திரும்ப வரவில்லை. இவா்களை தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து ரமேஷ் போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து பாண்டியம்மாள் மற்றும் மித்திரனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT