தேனி

மாநில அளவிலான கிரிக்கெட்: ஆண்டிபட்டி அணி முதலிடம்

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஆண்டிபட்டி அணி வெற்றி பெற்றது.

ஜி.கே. கிரிக்கெட் கிளப் சாா்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் ஆண்டிபட்டி அணியும், ஏத்தக்கோவில் அணியும் மோதின. இதில் ஆண்டிபட்டி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற ஆண்டிபட்டி அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. தொடா் நாயகன் பரிசுக்கு அந்த அணியைச் சோ்ந்த காளிராஜ் தோ்வு செய்யப்பட்டு தங்கக்காசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை ஏத்தக்கோவில் அணியும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை முறையே ஆண்டிபட்டி அணியும், பாப்பம்மாள் புரம் அணிகளும் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

SCROLL FOR NEXT