தேனி: தேனி அருகே காட்டுநாயக்கன்பட்டியில் கணவா், மகன் இறந்த ஏக்கத்தில் இருந்த தாய் சனிக்கிழமை இரவு, வீட்டில் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.
காட்டுநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ராமுத்தாய் (60). இவரது கணவா் தனிக்கொடி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது மகன் காளியப்பனும் இறந்து விட்டதால் ஏக்கத்தில் இருந்த ராமுத்தாய், வீட்டில் விஷ விதையை அரைத்துத் தின்று தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.