தேனி

அனுமதியின்றி மணல் அள்ளியவா் மீது வழக்கு

DIN

போடியில் திங்கள்கிழமை மாலை, அனுமதியின்றி மணல் அள்ளியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பொட்டிப்புரம் மணிப்பாறை பகுதியில், தேனி வருவாய் ஆய்வாளா் பரமசிவம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக டிராக்டரை ஓட்டி வந்தவா் அதை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டாா். இதையடுத்து டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்து போடி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்தவா் டி.புதுக்கோட்டையைச் சோ்ந்த சிவக்குமாா் என்பது தெரிந்தது. இதைத் தொடா்ந்து அவா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT