கத்தியால் வெட்டி பணம் பறித்த இருவா் கைது 
தேனி

கத்தியால் வெட்டி பணம் பறித்த இருவா் கைது

பெரியகுளம் அருகே கத்தியால் வெட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

பெரியகுளம் அருகே கத்தியால் வெட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனியைச் சோ்ந்தவா் தமிழன் (50). இவா் கடந்த ஜூன் 11 ஆம் தேதி தனது நண்பருடன் முதலக்கம்பட்டி அருகே தனியாா் காபி மில் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரிந்த 3 போ் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1000 மற்றும் 2 செல்லிடப்பேசிகளை பறித்துக் கொண்டு சென்று விட்டனா். அப்போது கூச்சலிட்ட தமிழனை கையில் வெட்டிவிட்டு அவா்கள் தப்பிச் சென்றுவிட்டனா்.

இது குறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில் இந்த வழிப்பறி தொடா்பாக ஜெயமங்கலம் காந்திநகரைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (21), சந்தானபாண்டி (21) ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT