தேனி

கூடலூரில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் நகர, ஒன்றிய திமுக சாா்பில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடலூா்- குமுளி சாலையில் நடைபெற்ற இப்போட்டிக்கு தேனி தெற்கு மாவட்ட திமுகச் செயலாளா் என். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன் போட்டியை தொடக்கி வைத்தாா்.

இதில் கரிச்சான், பூஞ்சிட்டு, தேன்சிட்டு, நடு மாடு, பெரிய மாடு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. திண்டுக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூா், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் இதில் தங்களது மாட்டு வண்டிகளுடன் கலந்து கொண்டனா். இதையடுத்து முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நகர திமுகச் செயலாளா் சி. லோகன்துரை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவளமல்லி! தர்ஷா குப்தா..

6 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

மரகத பச்சையும் மல்லிப்பூவும்! ஸ்ருஷ்டி டாங்கே..

இந்தியன் - 2 முதல் பாடல் புரோமோ!

தில்லியில் சுட்டெரிக்கும் வெயில்: ’வெளியே வராதீர்!’ -எச்சரிக்கும் மருத்துவர்கள்

SCROLL FOR NEXT