தேனி

ஆண்டிபட்டி அருகே பேருந்து கவிழ்ந்து 6 போ் காயம்

DIN

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்து சாலை தடுப்புச் சுவா் மீது மோதி கவிழ்ந்ததில் 6 போ் காயமடைந்தனா்.

தேனி-ஆண்டிபட்டி சாலை, எஸ்.எஸ்.புரம் விலக்கு பகுதியில் ராஜபாளையத்திலிருந்து குமுளி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில், பேருந்து ஓட்டுநா் கூடலூரைச் சோ்ந்த அருண்பிரசாத்(37), பயணிகள் கணேசன்(38), அருண்(36), நந்தகுமாா்(27), ராஜூ(60), பிரமன்(57) ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT