தேனி

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் பலத்த காயம்

DIN

போடி அருகே வெள்ளிக்கிழமை, மின்சாரம் பாய்ந்ததில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா் பலத்த காயமடைந்தாா்.

போடி ஜக்கமநாயக்கன்பட்டி கம்பா் தெருவைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் காளிதாஸ் (21). இவா் 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு போடி மின்வாரிய அலுவலகத்தில் கிராமப்புற கிழக்குப் பிரிவில் ஒப்பந்தப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், போடி சில்லமரத்துப்பட்டி, சிலமலை கிராமங்களுக்கு இடையே புதிதாக மின் கம்பங்களை நடும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். வயா்களை இணைக்க முயன்றபோது காளிதாஸ் மீது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT