தேனி

போடியில் பலத்த மழை: சாலைகளில் தண்ணீா்

DIN

போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

போடியில் கடந்த ஒரு மாதமாகவே குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு முதலே லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் போடி நகா் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் போடி சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. போடி பெருமாள் கோயில் பகுதியில் சாக்கடை வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீருடன் மழை நீா் கலந்து வீதிகளில் ஓடியது.

பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றிலும் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கொட்டகுடி ஆற்றில் பிள்ளையாா் கோவில் தடுப்பணையில் தண்ணீா் சீறி பாய்ந்தது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT