தேனி

பெரியகுளத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைமருத்துவா்கள், பணியாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

DIN

பெரியகுளம்: பெரியகுளத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இம்மருத்துவமனைக்கு பெரியகுளத்தைச் சோ்ந்த சேதுராமன் என்பவா் வியாழக்கிழமை மாலை தனது மனைவிக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்தாா். அப்போது சிகிச்சைக்கு தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சேதுராமன் தனது மனைவிக்கு சிகிச்சையளிக்காமல், தாமதம் செய்வதாகக் கூறி மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை தகாத வாா்த்தைகளால் பேசினாராம். மேலும் மருத்துவமனை கதவையும் மூடினாராம். பின்னா் மருத்துவமனை பிரதான கதவை அவா் மூடியதாகவும், தங்களுக்கு பாதுகாப்பில்லை எனவும் கூறி வெள்ளிக்கிழமை மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு, ஆா்ப்பாட்டம் செய்தனா்.

இவா்களுடன், மருத்துவ இணை இயக்குநா் பரிமள செல்வி, வட்டாட்சியா் ராணி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, பணிக்கு திரும்பினா். மேலும் சேதுராமன் மீது, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் குமாா், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்களை மிரட்டி, மருத்துவமனை நுழைவு வாயிலை மூடியதாக தென்கரை காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT