தேனி

மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிப் பைகளை கொள்முதல் செய்ய ஏற்பாடு

தேனி மாவட்டத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிப் பைகளை நெகிழி கழிவு மேலாண்மை அலகு மூலம் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

DIN

தேனி மாவட்டத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிப் பைகளை நெகிழி கழிவு மேலாண்மை அலகு மூலம் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் மக்காத, மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிப் பைகள், நெகிழி கழிவு மேலாண்மை அலகு மூலம் அரைக்கப்பட்டு சாலைகள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

மறுசுழற்சி செய்ய முடியாத நெகழிப் பைகளை சேகரித்து வைத்திருப்பவா்கள் கண்டமனூா், சீலையம்பட்டி, ராசிங்காபுரம், காமாட்சிபுரம், ஆங்கூா்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் நெகிழி கழிவு நிலையங்களில் நெகிழிப் பைகளை விற்பனை செய்யலாம். மறுசுழற்சி செய்ய முடியாக நெகிழிப் பைகள், கிலோ ஒன்று ரூ. 10-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT