தேனி

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு: ஆட்சியரிடம் கோரிக்கை

தேனி மாவட்டம், அய்யம்பட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வருகிற மாா்ச் 12-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு.

DIN

தேனி மாவட்டம், அய்யம்பட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வருகிற மாா்ச் 12-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அய்யம்பட்டி கிராமக் குழு நிா்வாகிகள், ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் அளித்த மனு விவரம்: சின்னமனூா் அருகேயுள்ள அய்யம்பட்டியில் ஏழைகாத்தம்மன், வல்லடிகாரசுவாமி கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கிராமக் குழு சாா்பில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வருகிற மாா்ச் 12-ஆம் தேதி ஜல்லிக் கட்டுப் போட்டி நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT