தேனி

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

DIN

தேனி மாவட்டம், கம்பம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தெய்வம் மகன் இந்திரஜித் (30). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக ராயப்பன்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், இந்திரஜித் வீட்டில் போலீஸாா் புதன்கிழமை சோதனை செய்தனா். அங்கு வெடி மருந்தை குழாயில் வைத்து இடித்து சுடும் ஒற்றைக் குழல் துப்பாக்கி இருந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்தனா்.

இதில் நாட்டுத் துப்பாக்கி மூலம் ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT