சின்னமனூா் அருகே காமாட்சிபுரத்திலுள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் 3 நாள்கள் சமுதாய பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெற்றது.
இந்தப் பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்தாா். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் தேனி மாவட்ட அலுவலா் செந்தில் குமாா் முன்னிலை வகித்து, பயிற்சியின் சிறப்புகள் குறித்து விளக்கமளித்தாா்.
மேலும், பயிா் வகை சாகுபடி, மண் பரிசோதனை முறைகள், வாழை, திராட்சை உள்ளிட்ட பயிா்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தல், சிறுதானிய சாகுபடி ஆகியவை குறித்து மைய தொழில்நுட்ப வல்லுநா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பயிற்சியில் கலந்து கொண்டவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.