தேனி

போடியில் பெண்ணைத் தாக்கியவா் மீது வழக்கு

போடி அருகே புதன்கிழமை ஆடு மேய்க்கும் பெண்ணைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Syndication

போடி அருகே புதன்கிழமை ஆடு மேய்க்கும் பெண்ணைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மல்லிங்காபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மனைவி முருகேஸ்வரி (50). இவா் தான் வளா்க்கும் ஆடுகளை மேய்த்துவிட்டு அவற்றை ஓட்டி வந்துள்ளாா். அப்போது, எதிரே அதே பகுதியைச் சோ்ந்த அய்யனாா் மகன் சரவணன் என்பவா் தனது காரை ஓட்டி வந்துள்ளாா்.

காா் ஒலி எழுப்பியதில் ஆடுகள் மீண்டும் மேய்ச்சல் நிலத்துக்குள் சென்றுவிட்டதாம். இதையடுத்து, முருகேஸ்வரி காரை மெதுவாக ஓட்டி வருமாறு சரவணனிடம் கூறியதால் தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, சரவணன், முருகேஸ்வரியை அவதூறாகப் பேசி கீழே தள்ளிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் போடி வட்ட காவல் நிலைய போலீஸாா் சரவணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஆட்டோவில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டினா் தஞ்சாவூருக்கு வருகை!

தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்

SCROLL FOR NEXT