முகப்பு
தேனி

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

Updated On : 14 ஏப்ரல் 2026, 12:54 am IST
கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் தனியாா் தொழிற்சாலையின் சுவரில் நெல் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் தேன் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கோவிலூரைச் சோ்ந்தவா் பால்ராஜ் (54). தேன் வியாபாரியான இவா், சனிக்கிழமை இரவு தேனி மாவட்டத்தில் தேன் வாங்கிக் கொண்டு, அதே பகுதியைச் சோ்ந்த தவிட்டுராஜா என்பவரது சரக்கு வாகனத்தில் ஏறிச்சென்றாா். இந்த வாகனத்தை தவிட்டுராஜா ஓட்டினாா்.

ஆண்டிபட்டி கணவாய் அருகே வாகனம் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பின் நோக்கிச் சென்று தனியாா் தொழிற்சாலை சுவற்றில் மோதியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த பால்ராஜ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.